» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்னணு கழிவுகளை சேகரிக்கப் புதிய திட்டம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
சனி 11, ஜூலை 2026 10:13:15 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு கழிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து சேகரித்து மறுசுழற்சி செய்யும் நோக்குடன், 'பாரி - ஈ பின்' என்ற புதிய அமைப்பையும் அதன் பிரத்தியேக இணையதளத்தையும் கனிமொழி எம்பி தொடங்கி வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகக் கனிமொழி எம்பி முன்னெடுத்த 'புத்தொழில் களம்' நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர், மாவட்டத்தில் சேரும் மின்னணு கழிவுகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்யச் 'சூழல் சிங்கம்' என்ற அமைப்பை நிறுவியுள்ளனர். இத் திட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநகராட்சிப் பகுதி பொதுமக்களிடம் இருந்து மின்னணு கழிவுகளைப் பெறவும் வஉசி கல்லூரியில் சிறப்புத் தொடக்க விழா நடைபெற்றது. இதில் 'பாரி - ஈ பின்' அமைப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய கனிமொழி எம்பி, பிளாஸ்டிக் கழிவுகள் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
மரங்களை வெட்டுவது, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், கடற்கரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால் காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் பாதிப்பும் தீவிரமடைந்துள்ளன எனத் தெரிவித்தார். நவீன சாதனங்களைக் குறைந்த காலம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமே மின்னணு கழிவுகளைக் குறைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.
இத் தொடக்க விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு, சூழல் சிங்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஷ்னோரா பலருடன் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிமன்றக் காவலில் சபரிவர்மன் மரணம்; காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதயநிதி வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:43:12 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் விளக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:36:53 PM (IST)

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்: வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் உயர வாய்ப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:28:17 PM (IST)

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)

மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள்: கோ.ப.அன்பழகன் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:53:14 PM (IST)

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:44:34 PM (IST)


