» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!
வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி விவாதங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டப் புதிய செயலாளராகப் பசுபதி நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே கட்சிப் பணிகளில் முரண்பாடுகள் நீடித்து வந்தன.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வருடாந்திர நிகர லாபம் ரூ.1,337.55 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!
வியாழன் 16, ஜூலை 2026 5:17:04 PM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 12:21:22 PM (IST)

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி!
வியாழன் 16, ஜூலை 2026 11:38:11 AM (IST)

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)


