» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதப் பிறப்பு தீர்த்தவாரி: சிறப்பு அபிஷேகங்கள்!
சனி 18, ஜூலை 2026 8:52:19 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாதத் தொடக்கத்தையொட்டி கோயிலின் நடை அதிகாலை 5:00 மணிக்குத் திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் இதர காலப் பூஜைகளும் வழக்கம்போல் நடத்தப்பட்டன.
பூஜைகளின் தொடர்ச்சியாகச் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்குப் பல்வேறு வாசனைத் திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் பாரம்பரியத் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. மாதப் பிறப்பையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி, வரிசையில் காத்திருந்து வழிபாடு மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!
புதன் 22, ஜூலை 2026 5:04:58 PM (IST)

அங்கன்வாடி முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு : டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
புதன் 22, ஜூலை 2026 4:42:01 PM (IST)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் த.வெ.க-வில் ஐக்கியம்!
புதன் 22, ஜூலை 2026 4:27:25 PM (IST)

ராகுல் காந்தி கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம்: நாடாளுமன்றப் போராட்டத்திற்கு ஆதரவு
புதன் 22, ஜூலை 2026 3:58:41 PM (IST)

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: நீட் தேர்வு ஒழிப்பே தீர்வு - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
புதன் 22, ஜூலை 2026 11:05:20 AM (IST)


