» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

வியாழன் 30, ஜூலை 2026 12:44:40 PM (IST)

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதி கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

எனினும், தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த அரசுப் பணி ஆணைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அந்தப் பணி நியமன உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் முறைப்படி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory