» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அருகே உள்ள வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இறச்சகுளம் முப்பிடாரி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் பழையாற்றை அடைந்ததும், கொண்டு வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்தனர்.
தொடர்ந்து, புதிய தாலிக்கயிறு மாற்றி, ஆற்றங்கரையில் அம்மனை வேண்டிச் சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவில் 200-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப்பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். ஆடிப்பெருக்கையொட்டி பழையாற்றுப் பகுதியில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)

திருத்தணியில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:09:11 PM (IST)

விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:58:25 AM (IST)

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:51:14 AM (IST)

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:03:58 AM (IST)

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)


