» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் மலையேறவும் கோயிலுக்குச் செல்லவும் அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்திற்குட்பட்ட சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று (10.08.2026) திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று (11.08.2026) நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கான அதிகாரப்பூர்வ தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:22:37 PM (IST)

தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம்: தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:05:25 PM (IST)

மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடர வேண்டும் : முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 10:44:57 AM (IST)

உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி: டிசம்பரில் 2வது அலகு சோதனை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:46:37 AM (IST)

நான் பேசும் விதத்தை வைத்து என்னை கிண்டல் செய்வதா? நிதியமைச்சர் மரியவில்சன் ஆவேசம்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:05:53 AM (IST)

வாகன சோதனையில் இளைஞரை லத்தியால் தாக்கிய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் : எஸ்பி உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:35:18 AM (IST)


