» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சதுரகிரி மலையில் காட்டுத்தீ: ஆடி அமாவாசை திருவிழாவிற்குப் பக்தர்கள் செல்லத் தடை - ஆட்சியர் உத்தரவு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:50:02 AM (IST)

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 11) பக்தர்கள் மலையேறவும் கோயிலுக்குச் செல்லவும் அனுமதி இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்திற்குட்பட்ட சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று (10.08.2026) திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்தத் தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, இன்று (11.08.2026) நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவிற்குச் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கான அதிகாரப்பூர்வ தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory