» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)
இளம்பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, அதைத் தட்டிக்கேட்ட அப்பெண்ணையும் அவரது தந்தையையும் மிரட்டிய இளைஞரை ஆறுமுகனேரி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (25). இவர் 25 வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்செயலைப் பற்றி அறிந்த அந்தப் பெண்ணும் அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து முகமது ரிச்வியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய அதிர்ச்சி சம்பவம்: தலைமையாசிரியர் இடமாற்றம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:46:01 AM (IST)

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:16:55 AM (IST)

திருநங்கையைக் கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:48:55 AM (IST)

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)

5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 12:48:20 PM (IST)


