» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:14:22 PM (IST)



ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இந்திய அணி வரும் 20-ம் தேதி தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது. வரும் 23-ம் தேதி அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் குரூப் சுற்றில் விளையாடுகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியினர் தொடரை முன்னிட்டு பிரத்யேக புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அவை ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளன.

முன்னதாக, இந்திய அணியின் ஜெர்சியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள படங்கள் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா இந்த தொடரில் அறியப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory