» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி: 17 வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் வெற்றி!

சனி 29, மார்ச் 2025 10:32:03 AM (IST)



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் 8வது லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் 18வது தொடரின் 8வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் துவக்க வீரர்கள் பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான துவக்கத்தை தந்து 45 ரன் சேர்த்திருந்த நிலையில், நுார் அகமது வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில் பில் சால்ட்டை (32 ரன்), தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். பின் வந்த தேவ்தத் படிக்கல் (27), அஸ்வின் பந்தில் ருதுராஜிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.

இதையடுத்து, கேப்டன் ரஜத் படிதார் உள்வந்தார். சிறிதுநேரத்தில் விராட் கோஹ்லி (31 ரன்) அவுட்டானார். அதன்பின், லிவிங்ஸ்டோன் (10 ரன்), ஜிதேஷ் சர்மா (12), படிதார்(51 ரன்) அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில், பெங்களூரு, 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சென்னை தரப்பில் நுார் அஹமது 3, பதிரனா 2, அஸ்வின், கலீல் அஹமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது. அதையடுத்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது. ஆரம்பம் முதலே சொதப்பலாக ஆடிய சென்னை அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்தது. அதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஹேசில்வுட் அதிகபட்சமாக 4 ஓவரில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தயால். லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்து புதிய வரலாறு படைத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory