» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ் இணைந்துள்ளார்.

இந்நிலையில் நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரசிகர்களால் 'பேபி ஏபிடி' என்றழைக்கப்படும் அதிரடி வீரரான டெவால்ட் பிரெவிஸ் கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்நிலையில் சென்னை அணி அவரை ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்த செய்ய உள்ளது. இவர் சென்னை அணியின் அடுத்த போட்டியான மும்பைக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் (20-ம் தேதி) சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)

சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல்!
செவ்வாய் 6, மே 2025 11:07:39 AM (IST)
