» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை, பெங்களூரு மைதானங்களில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் மாற்றம்: பி.சி.சி.ஐ.

திங்கள் 9, ஜூன் 2025 5:15:03 PM (IST)

இந்திய ஆண்கள், மகளிர் மற்றும் ஏ கிரிக்கெட் அணிகள் உள்ளூரில் விளையாட உள்ள போட்டிகளுக்கான மைதான மாற்றங்களை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி (2-வது டெஸ்ட்) அக்டோபர் 10-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க இருந்தது. ஆனால் அந்த போட்டி தற்போது புதுடெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் தொடங்க இருந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருந்தது. ஆனால் இந்த 3 போட்டிகளும் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதல் 2 போட்டிகள் சண்டிகருக்கும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதுடெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ராஜ்கோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory