» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடியில் சீலைன்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் பகடா ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்திய மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மெதோடியஸ் மெமோரியல் டி20 கிரிக்கெட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், துணை தலைவர் டாக்டர் மகிழ் ஜூவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த டி 20-கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் டிசிடபிள்யூ அணியும் - ஸ்டான்லி பில்டர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்டான்லி பில்டர்ஸ் அணி 20-ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய டிசிடபிள்யூ அணி நிர்ணயம் 13 ஓவர்களில் 2-விக்கெட் இழப்பிற்கு 113-ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு ரூ.40-ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 20-ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டினர் ராஜாபோஸ் ரீகன் மற்றும் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
