» சினிமா » செய்திகள்
வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார்
திங்கள் 1, ஏப்ரல் 2024 12:48:57 PM (IST)
வீடுபுகுந்து பெண்ணை மிரட்டியதாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறந்தபோது அது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.இதனால் இருத்தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவியை வீடுபுகுந்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீதேவி சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை சரண்யா மீது புகார் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)

தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)

விஜய் - திரிஷா விவகாரம்: இயக்குநர் பார்த்திபனின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
செவ்வாய் 10, மார்ச் 2026 11:10:17 AM (IST)

பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!
ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!
வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 5, மார்ச் 2026 12:02:04 PM (IST)

