» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி :சகோதரர் கைது!
வியாழன் 11, ஏப்ரல் 2024 5:27:29 PM (IST)

பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்ததாக அவரது சகோதரரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஹார்திக் பாண்டியா. தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது உடன் பிறந்த சகோதராரான குர்ணல் பாண்டியா லக்னௌ அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர்களது பெரியப்பா மகன் வைபவ் பாண்ட்யாவை மும்பை போலீசார் கைது செய்தனர்.
ஹர்திக், குர்னால் மற்றும் அவர்களது பெரியப்பா மகன் வைபவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த 2021ம் ஆண்டில் நிறுவனம் ஒன்றை துவங்கி உள்ளனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கும் லாபத்தில் ஹர்திக், குர்னால் பாண்ட்யாவுக்கு தலா 40 சதவீதமும், வைபவிற்கு 20 சதவீத லாபமும் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், வைபவ் பாண்ட்யா கிடைத்த லாபத்தை பிரித்துக் கொடுக்காமல், மற்றொரு நிறுவனத்தை துவக்கி அதில் அனைத்து பணத்தையும் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வைபவ் பாண்ட்யாவை கைது செய்தனர். அவர் மீது மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆறாம் வகுப்பு மாணவர்களில் 47% பேருக்கு வாய்ப்பாடு தெரியவில்லை : ஆய்வில் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:19:52 AM (IST)

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)
