» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் : மெளனம் கலைத்த தேவகவுடா கருத்து!
சனி 18, மே 2024 4:47:28 PM (IST)

பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, அவரது தாத்தாவும், மஜத தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.
மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேவகவுடா எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் குமாரசாமி பேசியுள்ளார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார்.
குற்றவாளி எனும் போது பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் மீதான வழக்கு எப்படி பதியப்பட்டது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)

மசோதாக்களுக்கு தமிழில் பெயர் வைக்காதது ஏன்? - கனிமொழி எம்.பி. கேள்வி
வியாழன் 18, டிசம்பர் 2025 3:51:31 PM (IST)

பனிக்காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென் இந்தியாவில் நடத்தலாம்: சசிதரூர் யோசனை
வியாழன் 18, டிசம்பர் 2025 3:46:32 PM (IST)


