» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள்: நிர்மலா சீதாராமன் மீது இன்போசிஸ் முன்னாள் சிஎஃப்ஓ குற்றச்சாட்டு!
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 10:30:58 AM (IST)
நீண்டகால மூலதன ஆதாய வரியை உயர்த்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டீர்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார்.
2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், பங்கு தொடர்பான குறுகியகால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், இந்த அறிவிப்பை மோகன்தாஸ் பை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்களது (சீதாராமன்) சிந்தனையற்ற செயலால் மக்களின் நம்பிக்கையைத் தகர்த்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியை டேக் செய்த அவர், "மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூலதன ஆதாய வரி உயர்வால் நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளனர். எனவே, அந்த அறிவிப்பை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெரு நாய் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சனி 1, நவம்பர் 2025 5:11:53 PM (IST)

ஆந்திராவில் கோவில் ஏகாதசி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்
சனி 1, நவம்பர் 2025 3:24:37 PM (IST)

வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)

உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ் : தேசிய ஒற்றுமை தினத்தில் பிரதமர் பேச்சு!
சனி 1, நவம்பர் 2025 8:43:01 AM (IST)

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சிறுவர்களை சிறைபிடித்த வெப் சீரிஸ் இயக்குநர் சுட்டுக்கொலை: மும்பையில் பரபரப்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:15:28 AM (IST)




