» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
9 ஆம் வகுப்பு ஃபெயிலானவர் வளர்ச்சிப் பாதை காட்டுவாரா? பிரசாந்த் கிஷோர் விமர்சனம்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:44:27 AM (IST)
9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம் என்று தேஜஸ்வி யாதவை பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.
தேஜஸ்வி யதாவுக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 19, ஏப்ரல் 2025 11:53:39 AM (IST)

மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை : ராஜஸ்தானில் நோயாளிகள் அதிர்ச்சி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:53:13 PM (IST)

மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:38:39 PM (IST)

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக பதிலடி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:13:29 AM (IST)

மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி அமல் : பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:00:08 PM (IST)
_1744885386.jpg)