» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதி லட்டு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: ரோஜா
செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:05:19 PM (IST)
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "இந்துக்களை ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும்.இந்த விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவர வேண்டும். புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பக்தி பூர்வமான உணர்ச்சிகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் துயர சம்பவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
வெள்ளி 3, ஜூலை 2026 4:26:43 PM (IST)

எத்தனால் கலப்பால் மைலேஜ் சற்றுக் குறைய வாய்ப்பு : மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஒப்புதல்!
வெள்ளி 3, ஜூலை 2026 11:52:24 AM (IST)

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)

ஓய்வூதியமும் மருத்துவக் காப்பீடும் இணைந்த மத்திய அரசின் புதிய திட்டம் : விரைவில் அறிமுகம்!
வியாழன் 2, ஜூலை 2026 11:48:48 AM (IST)

சர்வதேச சந்தை எதிரொலி: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது
புதன் 1, ஜூலை 2026 11:51:58 AM (IST)


