» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு: 5 நாள் சிறைவாசம் முடிந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 7:53:30 PM (IST)

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் 5 நாள் சிறைவாசம் முடிந்து பட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், சம்யுத்தா கிசான் மோர்ச்சா என்ற அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருபவர் பி ஆர்.பாண்டியன். இவர், கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிவராஜ் சவுகான், பிரகலாத்ஜோஷி, பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பங்கேற்றார்.
காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட அவரை வழிமறித்த பஞ்சாப் மாநில காவல்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களோடு வந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளை கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அன்று இரவே பட்டியாலா மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் அடைக்கப்பட்டனர்.
5 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், இன்று காலை சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஓரிருநாட்களில் அவர் தமிழ்நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு சென்ற தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காரணம் சொல்லப்படாமல் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவருடன் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி.ஜானும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)

ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)

ஆம் ஆத்மியில் பெரும் பிளவு: ராகவ் சத்தா, சந்தீப் பதக் உள்ளிட்ட 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:28:08 PM (IST)

