» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அலாகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதன் 26, மார்ச் 2025 11:49:52 AM (IST)
குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய இரு நபர்கள் முயற்சித்தது தொடர்பான வழக்கை அலாகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது. இந்த வழக்கில், குழந்தையின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் நாடாவை அவிழ்த்தது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என்று நீதிபதி ராம் மனோகர் நாராயணன் என்பவர் தீர்ப்பு வழங்கினார்.
இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டபோது, ”இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது என்பது வேதனை அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பை நிறுத்திவைப்பதாகவும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அலாகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு சமர்ப்பித்து பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப்பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது
சனி 19, ஏப்ரல் 2025 5:36:38 PM (IST)

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்!
சனி 19, ஏப்ரல் 2025 11:53:39 AM (IST)

மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை : ராஜஸ்தானில் நோயாளிகள் அதிர்ச்சி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:53:13 PM (IST)

மகாராஷ்டிராவில் இந்தியை திணித்தால் போராட்டம் வெடிக்கும்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:38:39 PM (IST)

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக பதிலடி!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:13:29 AM (IST)
