» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன்: கர்நாடக அமைச்சர் ஆவேசம்!
சனி 3, மே 2025 5:40:21 PM (IST)
பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

கர்நாடகத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸில் ஐக்கியமானார் ஸமீர் அகமது கான். இந்தநிலையில், சாம்ராஜ்பேட் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் வீட்டுவசதி, வஃக்ப், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: ”நாம் இந்தியர்கள், ஹிந்துஸ்தானியர்கள்; அப்படியிருக்கையில், நமக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பாகிஸ்தான் நமக்கு எப்போதுமே எதிரிதான். நாட்டுக்கு தேவைப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியும் அமைச்சர் அமித் ஷாவும் எனக்கு அனுமதியளித்தால், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தேவையான வெடிபொருள்களை தாருங்கள், அவற்றை அணிந்துகொண்டு பாகிஸ்தான் செல்ல தயார். நான் நகைப்புக்காக ஒன்றும் இப்படிப் பேசவில்லை. எனது உயிரை நாட்டுக்கா தியாகம் செய்யவும் தயார்” என்று கூறியிருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 6, மே 2025 10:57:43 AM (IST)

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)
