» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 20, மே 2025 4:04:43 PM (IST)
நீதிபதியாக பணியாற்ற, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க 3 ஆண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் என தெரிவித்து உள்ளது. 2002-ம் ஆண்டில் இந்த விதியில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வின்படி, புதிதாக சட்டப்படிப்பு படித்தவர்களும் இந்த பதவிகளுக்கு போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது, புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. 3 ஆண்டு கால அனுபவம் என்பது தடையாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த தளர்வு திருத்தி அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில், நீதிபதிகள் ஏ.ஜி. மசீ மற்றும் கே. வினோத் சந்திரன் உள்ளிட்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி துறை திறமையாக செயல்படுவதற்கு சட்ட அனுபவம் அவசியம் என கோர்ட்டு தெரிவித்தது.
இதன்படி, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 3 ஆண்டு அனுபவ காலம் தொடங்கும். 10 வருடம் வழக்கறிஞராக இருந்த ஒருவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீதி துறை அதிகாரி ஒருவரின் கையொப்பம் ஆகியன அனுபவத்திற்கான சான்றாக ஏற்று கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி அறிவிப்பு
ஞாயிறு 1, ஜூன் 2025 4:00:05 PM (IST)

சமையல் எண்ணெய் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி 10% ஆக குறைப்பு!
ஞாயிறு 1, ஜூன் 2025 10:35:26 AM (IST)

ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி: தாய்லாந்து கல்லூரி மாணவி பட்டத்தை வென்றார்!
ஞாயிறு 1, ஜூன் 2025 10:29:46 AM (IST)

மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற மத்திய அரசு அனுமதி!
சனி 31, மே 2025 5:37:10 PM (IST)

அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் உறுதி!
சனி 31, மே 2025 3:33:34 PM (IST)

இந்தியாவில் 2,710 பேருக்கு கரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு
சனி 31, மே 2025 12:49:46 PM (IST)
