» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல: ராகுலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!!
வியாழன் 5, ஜூன் 2025 12:48:38 PM (IST)
ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என, ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு.
இந்திய அரசியலமைப்பின் 19 - 1ன் ஏ பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு செய்யும் உரிமையை, இந்த பிரிவு வழங்காது.
ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது. ராகுலின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
இவன்Jun 5, 2025 - 06:56:18 PM | Posted IP 172.7*****
வெளிநாட்டுக்கார பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய கான் முட்டாள் குடும்பம் தான் காங்கிரஸ்
கந்தசாமிJun 5, 2025 - 03:32:48 PM | Posted IP 104.2*****
இந்திய இராணுவதின் சிந்தூர் நடவடிக்கையின் இழப்பு எவ்வளவு என்று ஏன் அரசாங்கம் தெரிவிக்க மறுக்கிறது
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்கள் தயாரிப்பு : டசால்ட், டாடா நிறுவனங்கள் ஒப்பந்தம்
வெள்ளி 6, ஜூன் 2025 4:31:29 PM (IST)

ஜம்மு - காஷ்மீரில் உலகின் உயரமான செனாப் பாலம் : பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:48:01 PM (IST)

வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 10:29:47 AM (IST)

நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: பெங்களூரு அணி நிர்வாகம் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:49:16 PM (IST)

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பதவி விலக வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 5, ஜூன் 2025 5:03:40 PM (IST)

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!
வியாழன் 5, ஜூன் 2025 10:22:44 AM (IST)

ஆனந்த்Jun 6, 2025 - 11:09:59 AM | Posted IP 104.2*****