» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பதவி விலக வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 5, ஜூன் 2025 5:03:40 PM (IST)
பெங்களூரில் 11பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது: அதிகாரத்தில் இருந்தவர்கள், விதான சவுதாவில் இருந்தவர்கள் ஒரு தனியார் நிறுவனம் இப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய அனுமதித்தது ஏன்?. ஏன் இது கொண்டாடப்பட்டது? இது ஒரு அரசு நிகழ்ச்சி அல்ல. பிறகு ஏன் கொண்டாடப்பட்டது? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அரசாங்கம் ஏன் இதைச் செய்தது? அதனால்தான் நான் பொறுப்புக்கூறலைக் கோருகிறேன்.
முதலில், கொண்டாட்ட நிகழ்ச்சி இலவசம் என்றார்கள். பின்னர், பாஸ் தேவை என்றும், ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கப்பட்டதாகவும் சொன்னார்கள். நுழைவாயில்கள் திறக்கப்படவில்லை. இரண்டு அல்லது மூன்று வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டனஃ அந்த வாயில்களுக்கு முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
உங்கள் சொந்த மாவட்ட துணை கமிஷனர் என்ன மாதிரியான அறிக்கையை வழங்குவார்? அதனால்தான் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒரு பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன். டி.கே. சிவகுமார் உடனடியாக ராஜினாமா செய்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு அமைச்சர் ஷோபா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்கள் தயாரிப்பு : டசால்ட், டாடா நிறுவனங்கள் ஒப்பந்தம்
வெள்ளி 6, ஜூன் 2025 4:31:29 PM (IST)

ஜம்மு - காஷ்மீரில் உலகின் உயரமான செனாப் பாலம் : பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:48:01 PM (IST)

வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 10:29:47 AM (IST)

நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: பெங்களூரு அணி நிர்வாகம் அறிவிப்பு
வியாழன் 5, ஜூன் 2025 5:49:16 PM (IST)

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல: ராகுலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!!
வியாழன் 5, ஜூன் 2025 12:48:38 PM (IST)

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!
வியாழன் 5, ஜூன் 2025 10:22:44 AM (IST)
