» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)
மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 3-வது கட்டாய மொழி பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர் கடந்த 17-ம் தேதி மகாராஷ்டிர அரசு தரப்பில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கப்படும். எனினும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த 20 சதவீத மாணவர்கள் விரும்பினால் இந்தியை தவிர்த்து வேறு பிராந்திய மொழியை கற்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் நேற்று முன்தினம் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல், ஜூனில் வெளியிடப்பட்ட அரசாணைகள் வாபஸ் பெறப்படுகிறது.
தொடக்கப் பள்ளியில் மும்மொழி கொள்கையை அமல் செய்வது தொடர்பாக கல்வியாளர் நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு ஆய்வு செய்யும். இந்த குழு அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)
