» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்​வர் அறிவிப்பு!

செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டுள்ளதாக முதல்வர் தேவேந்​திர பட்​னா​விஸ் அறிவித்துள்ளார்.

மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.

பின்​னர் கடந்த 17-ம் தேதி மகா​ராஷ்டிர அரசு தரப்​பில் திருத்​தப்​பட்ட அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தியை கற்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்​பிக்​கப்​படும். எனினும் குறிப்​பிட்ட வகுப்பை சேர்ந்த 20 சதவீத மாணவர்​கள் விரும்​பி​னால் இந்​தியை தவிர்த்து வேறு பிராந்​திய மொழியை கற்​கலாம் என்று அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டது. இதற்​கும் எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.

இந்த விவ​காரம் தொடர்​பாக முதல்​வர் பட்​னா​விஸ் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்​மொழிக் கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கடந்த ஏப்​ரல், ஜூனில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் வாபஸ் பெறப்​படு​கிறது.

தொடக்​கப் பள்​ளி​யில் மும்​மொழி கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கல்​வி​யாளர் நரேந்​திர ஜாதவ் தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும். இந்த குழு அடுத்த 3 மாதங்​களில் அறிக்​கையை தாக்​கல் செய்​யும். அதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு தேவேந்​திர பட்​னா​விஸ்​ தெரிவித்​தார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory