» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் : அடுத்த கல்வியாண்டில் அமல்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 11:33:46 AM (IST)
புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் சிபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE) 2023 மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றுடன் இணைந்து, மனப்பாடம் செய்வதிலிருந்து திறன் அடிப்படையிலான கற்றலுக்கு கவனத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டு உபயோகப்பொருட்கள் அதிரடி வரிகுறைப்பு: ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்
வியாழன் 4, செப்டம்பர் 2025 10:59:36 AM (IST)

வங்கியில் கொள்ளைபோன ரூ.5 கோடி நகை, பணம் மீட்பு: ஊழியர் உள்பட 5 பேர் கைது
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:51:08 AM (IST)

தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)

சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை: மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி!
புதன் 3, செப்டம்பர் 2025 5:20:16 PM (IST)

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து மகள் கவிதாவை நீக்கிய சந்திரசேகர் ராவ்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:02:50 PM (IST)

ஆசிரியர்களுக்கு டெட் தகுதி தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:53:18 AM (IST)
