» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரைக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

புதன் 24, செப்டம்பர் 2025 11:49:01 AM (IST)



டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

டெல்லி விக்யான் பவனில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், தேசிய விருது அறிவிக்கப்பட்ட திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான், விக்ராந்த் மாஸே இருவரும் பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் முதல்முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகை விருதை ராணி முகர்ஜி பெற்றார். 

சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை, ‘பார்க்கிங்’ தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ் ‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் பெற்றனர். 

இதேபோல, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து,`தாதா சாகேப் பால்கே' விருது மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றபின் பேசிய அவர், "இந்த தருணம் எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல.மலையாள திரைப்படக் குடும்பத்துக்கே சொந்தமானது.

இந்த விருதை, எங்கள் துறையின் பாரம்பரியம், படைப்பாற்றலுக்கான கூட்டு மரியாதையாகப் பார்க்கிறேன். மலையாள சினிமாவை கலைநோக்கோடும், கற்பனையோடும் உருவாக்கியவர்களின் சார்பாக இவ்விருதை ஏற்கிறேன். என் கனவுகளிலும் கூட இந்த தருணத்தைக் கற்பனை செய்ததில்லை. அதனால் இது ஒரு கனவு நனவானதல்ல. அதைவிட மிகப் பெரியது. மலையாளத் திரைத் துறைக்கும், கேரள பார்வையாளர்களுக்கும் இவ்விருதை நான் அர்ப் பணிக்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. மத்திய அரசுக்கு நன்றி” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory