» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு : தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 11-வது தேசிய மாநாட்டில், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, தேசிய செயற்குழு உறுப்பினர்களாக எம்.பி. மதிமகாராஜா (தலைவர், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் யூனியன்). எஸ். மோகன்ராஜ் (கோவை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் வருகையைப் பாராட்டி, தேசியச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகள் உயர்வு: மக்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:12:22 PM (IST)

பெண்கள் இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்க திமுக முயற்சி - தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:12:41 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்தில் 8 பக்தர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிதியுதவி அறிவிப்பு
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:21:14 AM (IST)

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 93.7% பேர் தேர்ச்சி!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:37:11 AM (IST)

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

