» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!

சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)



மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கென்யாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 29.37 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 24 பெண்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.

அப்போது குழுவாக வந்த சில பெண்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களது உடைமைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ரூ.37.74 கோடி மதிப்பிலான தங்கம்

சோதனையின் முடிவில், அந்தப் பெண்கள் தங்களது உடைகள், பைகள் மற்றும் காலணிகளுக்குள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த    25.1 கிலோ தங்கக் கட்டிகள்,     4.27 கிலோ தங்க நகைகள் என மொத்தம் 29.37 கிலோ தங்கம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.37.74 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 24 பெண்களும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் குறிப்பிட்ட கமிஷன் தொகைக்காகத் தங்கத்தைக் கடத்தி வந்துள்ளனர். பிடிபடாமல் இருப்பதற்காக இவர்களுக்குச் சிறப்பான பயிற்சியும் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதிகாரிகளின் கூர்மையான கண்காணிப்பில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மும்பை விமான நிலையத்தில் இந்த ஆண்டில் பிடிபட்ட மிகப்பெரிய தங்கக் கடத்தல் சம்பவம் இதுவாகும். இந்தப் பெண்களைப் பின்னணியிலிருந்து இயக்கிய கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory