» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராமர் கோயிலில் ரூ.7 கோடி கையாடல் வழக்கு : அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 3:53:46 PM (IST)

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வழக்கின் அவசரத் தன்மை குறித்து நீதிமன்றப் பதிவகம் மற்றும் உரிய அதிகாரி ஆகியோர் திருப்தி அடைந்த பிறகு, உரிய நேரத்தில் இந்த மனுக்கள் விசாரணைக்குப் பட்டியலிடப்படலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி விரைவான விசாரணைக்கு வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, குற்றத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜிநாமா செய்தனர். இப்புகார் தொடர்பாகக் கோயிலில் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுத் தற்பொழுது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)


