» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:59:56 PM (IST)
இந்திய நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாகப் பதவியில் இருந்த ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்ற ஜெனரல் உபேந்திர திவேதியின் பணிக்காலம் இன்றுடன் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து, புதுடெல்லியில் அவருக்கு ராணுவ முறைப்படியான பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் அவருக்கு வழங்கப்பட்ட ராணுவத்தினரின் கௌரவ அணிவகுப்பு மரியாதையைப் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ள தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில், நாட்டின் 31-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார். கடந்த 1986-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை மற்றும் பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றிய நீண்ட கள அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா உலகின் கப்பல் கட்டுமான மையமாக உருவாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:58:05 AM (IST)

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)


