» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கமலா ஹாரிஸ் குறித்து டிரம்பின் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 12:25:43 PM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டொனால்டு டிரம்ப் பேசியதற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
சிகாகோவில் நடைபெற்ற தேசிய கறுப்பின பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு டிரம்பிடம் கறுப்பின வாக்காளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து டிரம்ப் பேசியதாவது: "கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். ஆனால், தற்போது தன்னை கறுப்பராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.
அதனால், அவர் கறுப்பரா? அல்லது இந்தியரா? என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் நான் மதிக்கிறேன். ஆனால், அவர் வெளிப்படையாக இல்லை.” எனத் தெரிவித்தார்.
டிரம்பின் பேச்சுக்கு உடனடியான கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது: ”ஒரு கறுப்பின பெண்ணாக உங்கள் முன், உங்களுக்குன் போட்டியாக நிற்கிறார். இதுபோன்ற பேச்சு அவமானகரமானது. ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காட்டுகிறார் என்பதை பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது அவரது சொந்த முடிவு. கமலா ஹாரிஸ் மட்டுமே அவரது இனம் குறித்து பேச முடியும். அமெரிக்காவின் துணை அதிபருக்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
ஜமைக்கா நாட்டை பூர்விகமாக கொண்ட தந்தைக்கும், இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாய்க்கு அமெரிக்காவில் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.ஜமைக்கா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களத்தில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று டிரம்ப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இந்தியா காரணமா? ஆப்கானிஸ்தான் பதிலடி
புதன் 22, அக்டோபர் 2025 12:24:10 PM (IST)

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 12:53:30 PM (IST)

ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
சனி 18, அக்டோபர் 2025 10:46:45 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி உறுதி கூறினார்: டிரம்ப் பேட்டி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:31:02 PM (IST)

சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்பு : இந்திய வம்சாவளி ஆலோசகர் அமெரிக்காவில் கைது
புதன் 15, அக்டோபர் 2025 11:48:01 AM (IST)
