» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், இந்த சந்திப்பானது செளதி அரேபியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் நேற்று ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொலைபேசியில் பேசிய டிரம்ப், போர் நிறுத்தம் குறித்து விரிவாக பேசியுள்ளார். அப்போது, உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுக்கு புதின் ஒப்புக் கொண்டதாகவும், டிரம்ப்பை ரஷியாவுக்கு அழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், ரஷிய முடிவுகளை தெரிவித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் உள்துறை செயலாளர், சிஐஏ இயக்குநர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
நேட்டோவில் இணைய முயற்சித்ததால்தான் உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கிய நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு போர் நிறுத்தத்துக்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் உக்ரைன் ஆதரவு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் நிலைபாட்டை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், "ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை.
தற்போதைய நிலையில் உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது. எனவே, ரஷியாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும். மேலும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்க வேண்டும். அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷியாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
