» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் புகுந்த கார் : 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம்!

புதன் 28, மே 2025 11:43:56 AM (IST)



இங்கிலாந்து கால்பந்து போட்டி வெற்றி பேரணியில் கார் புகுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர்.

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ், போலீசார் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

காருக்கு அடியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதனை லிவர்பூல் நகர மெட்ரோ மேயர் ஸ்டீவ் ரோதரம் இன்று கூறினார். சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் 53 வயதுடைய இங்கிலாந்து வெள்ளை இன நபர் ஒருவரை மெர்சிசைடு போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தின்போது, சிலர் கார் ஓட்டுநரை துரத்தி சென்றனர். சிலர் கார் மீது எட்டி உதைத்தனர். எனினும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி பிரதமர் கீர் ஸ்டார்மர், மேயர் ரோதரமிடம் விவரங்களை கேட்டு அறிந்துள்ளார். அதிகாரிகளும் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதன்பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory