» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
சனி 7, ஜூன் 2025 12:41:14 PM (IST)

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இந்திய குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவிக்க அமெரிக்காவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழு சென்றுள்ளது. அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவிடம் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தபின், அமெரிக்க வெளியுறவு துணைச் செயலாளர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவும் உறுதியாக நிற்கிறது.
எல்லைதாண்டிய பயங்கரவாதம், எந்த வடிவில் இருந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்று தனது உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துரைத்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தோம் என்று தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அழித்தது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)

