» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுடன் வர்த்தகத் தடைகளைத் தீர்க்க டிரம்ப் விருப்பம்: பிரதமர் மோடி வரவேற்பு!
புதன் 10, செப்டம்பர் 2025 11:31:53 AM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளத்தில், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் கோரிக்கையை வரவேற்ற பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா - அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.
இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது மட்டுமின்றி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் டிரம்ப் கூறினார். இதனையயடுத்து, ரஷியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)

சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவரை அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் : டிரம்ப் ஆவேசம்!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:38:45 PM (IST)

நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)

நேபாளத்தில் தொடர் போராட்டம் வன்முறை எதிரொலி: பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 3:30:07 PM (IST)

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் வரி விதிப்பு: ஜெலன்ஸ்கி வரவேற்பு
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:44:39 PM (IST)

சமூக வலைதளங்களுக்கு தடை: நேபாளத்தில் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் 9பேர் பலி!
திங்கள் 8, செப்டம்பர் 2025 4:11:10 PM (IST)
