» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!
திங்கள் 29, செப்டம்பர் 2025 12:09:28 PM (IST)

சீனாவில் ரூ.336 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் வேளாண் துறை அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அரசின் திட்டங்களை பணத்தை வாங்கிக் கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் ரூ.336 கோடி வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:45:34 PM (IST)

ஜப்பானில் பொருளாதார நெருக்கடி: பிரதமர், அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 11:54:44 AM (IST)

இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு டிரம்பின் துணிச்சலான தலைமையே காரணம்: ஷபாஸ் ஷெரீப்
திங்கள் 10, நவம்பர் 2025 11:16:26 AM (IST)

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி - பாகிஸ்தானுடன் போருக்கு தயார்: தலீபான்கள் அறிவிப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 10:42:34 AM (IST)

அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
சனி 8, நவம்பர் 2025 12:37:05 PM (IST)

மெக்சிகோ நாட்டின் அதிபருக்கு பாலியல் தொல்லை: அத்துமீறிய வாலிபர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 12:10:49 PM (IST)




