» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோமாஸ்கந்தர் மற்றும் 16-ம் நூற்றாண்டு விஜயநகர காலத்தைச் சேர்ந்த சுந்தரர்-பரவை நாச்சியார் வெண்கல சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சிலைகள் குறித்து அருங்காட்சியகம் தீவிர ஆராய்ச்சி செய்தது. பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்தது. அப்போது இந்தச் சிலைகள் தமிழகக் கோயில்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டு கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இரு நாட்டின் நட்புறவு அடிப்படையில், ஷிவா நடராஜர் சிலையை மட்டும் அருங்காட்சியகத்தில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து காட்சிப்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. அந்த சிலையை பற்றிய முழு விவரங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
தென் இந்தியாவின் வெண்கல வார்ப்பு திறன், கலை நுணுக்கம், புனிதம் போன்றவற்றின் எடுத்துக்காட்டாக இந்த சிலைகள் அமைந்துள்ளன. வழக்கமாக இந்த சிலைகள் கோயில் விழாவின் போது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோமாஸ்கந்தர் மற்றும் 16-ம் நூற்றாண்டு விஜயநகர காலத்தைச் சேர்ந்த சுந்தரர்-பரவை நாச்சியார் வெண்கல சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சிலைகள் குறித்து அருங்காட்சியகம் தீவிர ஆராய்ச்சி செய்தது. பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்தது. அப்போது இந்தச் சிலைகள் தமிழகக் கோயில்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டு கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இரு நாட்டின் நட்புறவு அடிப்படையில், ஷிவா நடராஜர் சிலையை மட்டும் அருங்காட்சியகத்தில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து காட்சிப்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. அந்த சிலையை பற்றிய முழு விவரங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
தென் இந்தியாவின் வெண்கல வார்ப்பு திறன், கலை நுணுக்கம், புனிதம் போன்றவற்றின் எடுத்துக்காட்டாக இந்த சிலைகள் அமைந்துள்ளன. வழக்கமாக இந்த சிலைகள் கோயில் விழாவின் போது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்: ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு!
வெள்ளி 20, மார்ச் 2026 11:45:05 AM (IST)

வடகொரியத் தேர்தலில் கிம் ஜாங் உன் வெற்றி: 0.07% எதிர்ப்பு வாக்குகளால் பரபரப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:46:37 PM (IST)

ஈரான் பாதுகாப்புப் படைத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டாரா? இஸ்ரேல் அறிவிப்பு!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:48:46 PM (IST)

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாகத் தலிபான் அரசு அறிவிப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 10:33:45 AM (IST)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காபி குடிப்பது போன்ற வீடியோ போலி: க்ரூக் ஏஐ தகவல்!
திங்கள் 16, மார்ச் 2026 5:53:38 PM (IST)

