» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:53:28 PM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் அரசு அலுவலகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனைச் சமாளிக்க எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, 321 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டு, 335 ரூபாய்க்கு (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகப் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பின்வரும் அவசர கால உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி: நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு மூடப்படும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் சலுகை 50% ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய (Work from Home) உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும். தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போருக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் ஈரான்: மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 5:45:45 PM (IST)

ஈரான் உடனான 2ஆம் கட்ட அமைதிப்பேச்சுவார்த்தை : அமெரிக்க துணை அதிபர் பங்கேற்கவில்லை
சனி 25, ஏப்ரல் 2026 12:03:38 PM (IST)

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:00:28 PM (IST)

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை: பிரான்ஸ் அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:17:03 AM (IST)

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

