» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:42:28 PM (IST)

கத்தார் நாட்டில் உள்ள இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களின் பின்னணியில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையின் ஏற்றுமதி முனையம் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் காரணமாகப் பதற்றம் தணிந்துள்ள நிலையில், கத்தார் அரசு மூடிக்கிடந்த முனையத்தை மீண்டும் இயக்கி உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டது.
கத்தாரில் உள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் ஊழியர்களும் பொறியாளர்களும் மறுசீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குப் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும், மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் இரங்கல் :
இந்தச் சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். கத்தார் அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்கா - இத்தாலி தலைவர்கள் இடையே மோதல் முற்றியது: டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!
திங்கள் 22, ஜூன் 2026 11:00:35 AM (IST)

ஈரானில் பிரபல பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை : மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 5:37:38 PM (IST)

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சு நடத்துவோம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:32:35 PM (IST)

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும் : உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!
வியாழன் 18, ஜூன் 2026 11:18:03 AM (IST)

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)


