» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கா - இத்தாலி தலைவர்கள் இடையே மோதல் முற்றியது: டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!
திங்கள் 22, ஜூன் 2026 11:00:35 AM (IST)

சர்வதேச அரங்கில் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டு, அது தற்போது பகிரங்கமான வார்த்தை மோதலாக வெடித்துள்ளது!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே சர்வதேசக் கொள்கைகள் மற்றும் தனிப்பட்ட விமரிசனங்கள் சார்ந்து எழுந்துள்ள விவாதம் உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தாலியில் பிரதமர் மெலோனியின் மக்கள் செல்வாக்குத் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், அதனை ஈடுசெய்து தனது அரசியல் நிலையைத் தக்கவைத்துக் கொள்ளத் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மெலோனி கெஞ்சியதாகவும் விமரிசித்திருந்தார். மேலும், இத்தாலிய விமான ஓடுதளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த மெலோனி அனுமதிக்கவில்லை என்றும், தற்போது அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்து தனது சர்வதேசச் செல்வாக்கை மீட்டெடுக்க அவர் முயல்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
மெலோனியின் பதிலடி:
டொனால்ட் டிரம்பின் இந்த விமர்சனத்திற்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கடுமையான முறையில் தனது மறுப்பையும் பதிலடியையும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "டிரம்ப் கூறியுள்ளது அப்பட்டமான பொய். இத்தாலியோ அல்லது நானோ யாரிடமும், எந்தச் சூழலிலும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்களின் நட்பு எந்த விதத்திலும் என் நாட்டின் செல்வாக்கையோ அல்லது எனது தனிப்பட்ட செல்வாக்கையோ உயர்த்தப் போவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இத்தாலியின் தேசிய நலனைக் காப்பதிலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும்தான் எனது செல்வாக்கு அடங்கியுள்ளது. என்னைப் பற்றியோ, எனது உள்நாட்டுச் செல்வாக்கைப் பற்றியோ உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம்; முதலில் உங்கள் நாட்டின் வேலைகளில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்" என்று மெலோனி டிரம்பிற்கு நேரடியாக அறிவுறுத்தியுள்ளார். ஒருகாலத்தில் நட்புப் பாராட்டிய இரு வல்லரசுத் நாட்டுத் தலைவர்களின் இந்தத் தொடர் மோதல் சர்வதேச அரசியல் உத்திகளில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாள வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 500 : மீட்புப் பணிகள் தீவிரம்!
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:23:24 AM (IST)

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)


