» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

MetaFineUsCourt.jpg

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் விதித்த 162 கோடி ரூபாய் அபராதத் தொகையை வழங்க, 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளங்களை நடத்தும் 'மெட்டா' நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 47 மாகாண அரசுகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுவர் - சிறுமியரின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தன.

குறிப்பாக, 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எளிதில் இச்செயலிகளுக்குள் நுழையும் வகையில் விதிகளுக்குப் புறம்பாக மெட்டா செயல்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தன. கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வரும் முன்பே, நீதிமன்றம் விதித்த 162 கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்த மெட்டா தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory