» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) விளக்கம் அளித்துள்ளது.
நேபாளத்தில் திபெத்தையொட்டி உள்ள ரசுவா மாவட்டத்தில் ஓடும் போடே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் திடீரெனக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கோஷி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 இந்தியர்கள் உட்பட 570-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கமே காரணம் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், இத்தகவலைத் திரும்பப் பெற்றுள்ள அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல; பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட நிலச்சரிவே இத்தீவிர வெள்ளத்திற்குக் காரணம். ஆனால், அப்பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட அதிர்வு, நில அதிர்வு அளவிகளில் 5.2 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. நில அதிர்வுத் தரவுகள், அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:01:50 PM (IST)

நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளப்பெருக்கு: 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:00:38 AM (IST)

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)

கினியாவில் கனமழையால் குப்பை மலை சரிந்து 30 பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:45:05 PM (IST)

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)


