» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கணவருடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாப சாவு
ஞாயிறு 19, நவம்பர் 2023 8:55:46 AM (IST)
நெல்லையில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் ( 65). இவருடைய மனைவி சைலஜா (62). இவர்கள் இருவரும் சேரன்மாதேவி அருகே இடையன்குளத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் அங்கிருந்து மொபட்டில் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் வந்தபோது, அவர்களுக்கு முன்பாக சென்ற அரசு பஸ் திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்குள் திரும்பியது. இதனால் சோமசுந்தரம் மொபட்டை நிறுத்த முயன்றார். இதில் மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த சைலஜா நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.
அப்போது அவர்களுக்கு பின்னால் நெல்லை சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வந்த மற்றொரு பஸ்சின் சக்கரத்தில் சிக்கியதில் சைலஜா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாலையில் தவறி விழுந்ததில் காயமடைந்த சோமசுந்தரம், இறந்த மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சைலஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோமசுந்தரத்தை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சைலஜாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
