» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 4பேர் கைது!
ஞாயிறு 19, நவம்பர் 2023 2:11:32 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து, 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் நேற்று (18.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (24), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ண பெருமாள் (24), தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கர்லின் (24) மற்றும் திருநெல்வேலி பேட்டை, காமராஜ் நகரைச் சேர்ந்த முகமது அலி மகன் ஷானவாஷ் (23) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1200 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் என 12 வழக்குகளும்,
கண்ண பெருமாள் மீது வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கர்லின் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்குகள் என 5 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஞானமுத்துNov 19, 2023 - 11:39:31 PM | Posted IP 172.7*****