» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் தை அமாவாசை தர்ப்பணம் : பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது!
வெள்ளி 9, பிப்ரவரி 2024 4:40:21 PM (IST)

குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தை மாத அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி தங்களின் மூதாதையர்களை நினைத்து வழிபாடு நடத்துவதும், தர்ப்பணம் செய்வதும் வழக்கம். மூதாதையர் ஆன்மா சாந்தி பெறவும், ஆன்மா புகலிடம் பெறவும் தை மற்றும் ஆடி மாத அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அருவியில் மக்கள் புனித நீராடி, அப்பகுதியில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மூலம் பொதுமக்கள் தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். புரோகிதர்கள் கொடுத்த எள், நீரை மெயின் அருவியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் விட்டு வழிபாடு நடத்தினர். தர்ப்பணம் முடிந்ததும் பொதுமக்கள் செண்பக விநாயகர் கோயில், குற்றாலநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
