» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து - பொது மேலாளர் எச்சரிக்கை
வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:34:26 PM (IST)
ஆவின் பால் பொருட்களை கூடுதலான விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்தால் முகவர் உரிமம் இரத்து செய்யப்படும் என்று ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆவின் முகவர்கள் மற்றும் ஆவின் பாலக ஒப்பந்ததாரர்களுக்கான அறிவிப்பு என்னவென்றால், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஏற்கனவே முகவர்களாக செயல்படுபவர்கள் தங்கள் முகவர் உரிமம் காலம் முடிவடைந்த பட்சத்தில் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் உரிமம் இரத்து செய்யப்பட்டு பால் வழங்குவது நிறுத்தம் செய்யப்படும். ஆவின் பாலகத்திற்கான உரிமம் இரத்து செய்யப்பட்டவர்கள் உடனடியாக பாலகத்தை மூடி, பாலகத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆவின் பாலகத்திற்கான வாடகை, இட வாடகையை எந்தவித நிலுவையுமின்றி உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
அரசு துறைகளால் (மாநகராட்சி / நெடுஞ்சாலைத்துறை / வேளாண்துறை / உள்ளாட்சி அமைப்புகள்) நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இடம் எதுவும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆவின் பாலகத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களைத் தவிர வேறு பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முகவர் உரிமம் இரத்து செய்யப்படும்.
ஆவின் பால் மற்றும் ஆவின் பால் உபபொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட (MRP) கூடுதலான விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் முகவர் உரிமம் இரத்து செய்யப்படும். ஆவின் முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இது குறித்து நிர்வாகத்திற்கு புகார்கள் எதுவும் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
