» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிசிடபிள்யூ சார்பில் மெகா இலவச மருத்துவ முகாம்
சனி 10, பிப்ரவரி 2024 4:56:20 PM (IST)

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் தலைவன்வடலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் தலைவன்வடலியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஆத்தூர் சங்கர் மருத்துவமனை டாக்டர் மாலதி பத்மநாபன், டாக்டர் ஒலிமுத்து, காயல்பட்டணம் கேஎம்டி மருத்துவமனை டாக்டர் காதர் பாஷா, திருச்செந்தூர் ஸ்ரீ அம்பிகை ஆர்த்தோ மருத்துவமனை டாக்டர் பார்த்தசாரதி, திருச்செந்தூர் எடிஷன் மருத்துவமனை டாக்டர் ஜெஃப் ரெட்லின், டிசிடபிள்யூ டாக்டர் சண்முகம், மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, எலும்பு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 154 பேர் பயனடைந்தனர். டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாக துணைத் தலைவர் ஜி. சீனிவாசன் மற்றும் தலைவன்வடலி கிராமத்தின் பிரதிநிதிகள் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

KumarFeb 10, 2024 - 05:45:14 PM | Posted IP 172.7*****