» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீன் விலை உயா்வு: மீனவா்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 8:22:21 AM (IST)
தூத்துக்குடியில், வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் குவிவது வழக்கம். இதனால், சனிக்கிழமைகளில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் அதிகமாக கரைதிரும்பும். ஆனால், அண்மையில் புளியம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழா காரணமாக ஆழ்கடல் மீனவா்கள் பலா் கடந்த 8ஆம் தேதிக்கு மேல்தான் கடலுக்குச் சென்றனா்.
எனவே, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்வரத்து குறைந்திருந்ததால், விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,000, விளைமீன் ரூ. 500, ஊளி மீன் ரூ. 450, பாறை மீன் ரூ. 4,00, சூரை, கிழவாலை மீன்கள் ரூ. 200, நண்டு ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. குறைவான மீன்கள் கிடைத்த கவலையிலிருந்த மீனவா்கள், அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

என்னதுFeb 11, 2024 - 09:55:03 AM | Posted IP 172.7*****