» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீன் விலை உயா்வு: மீனவா்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 8:22:21 AM (IST)
தூத்துக்குடியில், வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் குவிவது வழக்கம். இதனால், சனிக்கிழமைகளில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் அதிகமாக கரைதிரும்பும். ஆனால், அண்மையில் புளியம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழா காரணமாக ஆழ்கடல் மீனவா்கள் பலா் கடந்த 8ஆம் தேதிக்கு மேல்தான் கடலுக்குச் சென்றனா்.
எனவே, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்வரத்து குறைந்திருந்ததால், விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,000, விளைமீன் ரூ. 500, ஊளி மீன் ரூ. 450, பாறை மீன் ரூ. 4,00, சூரை, கிழவாலை மீன்கள் ரூ. 200, நண்டு ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. குறைவான மீன்கள் கிடைத்த கவலையிலிருந்த மீனவா்கள், அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : பட்டப்பகலில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)


என்னதுFeb 11, 2024 - 09:55:03 AM | Posted IP 172.7*****