» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீன் விலை உயா்வு: மீனவா்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 8:22:21 AM (IST)
தூத்துக்குடியில், வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் குவிவது வழக்கம். இதனால், சனிக்கிழமைகளில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் அதிகமாக கரைதிரும்பும். ஆனால், அண்மையில் புளியம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழா காரணமாக ஆழ்கடல் மீனவா்கள் பலா் கடந்த 8ஆம் தேதிக்கு மேல்தான் கடலுக்குச் சென்றனா்.
எனவே, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்வரத்து குறைந்திருந்ததால், விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,000, விளைமீன் ரூ. 500, ஊளி மீன் ரூ. 450, பாறை மீன் ரூ. 4,00, சூரை, கிழவாலை மீன்கள் ரூ. 200, நண்டு ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. குறைவான மீன்கள் கிடைத்த கவலையிலிருந்த மீனவா்கள், அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)



என்னதுFeb 11, 2024 - 09:55:03 AM | Posted IP 172.7*****