» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி எம்.பி. போட்டியிட அமைச்சர்கள் விருப்ப மனு
சனி 2, மார்ச் 2024 8:27:03 AM (IST)
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர்கள் விருப்பமனு வழங்கினர்.

தற்போது, தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று, தி.மு.க. எம்.பி. கனிமொழி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பமனுவை பூர்த்தி செய்து ரூ.50 ஆயிரம் கட்டணத்துடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வழங்கினார்.
அதேபோல், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிஷங்கர் உள்பட 38 பேர் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு வழங்கினர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 12 பேர் விருப்பமனுக்களை நேற்று வழங்கினார்கள்.
மக்கள் கருத்து
இது என்ன பிழைப்புMar 3, 2024 - 03:11:36 PM | Posted IP 162.1*****
தூத்துகுடில பிறந்த MP வேற ஆள் இல்லையா? அவங்க குடும்பம் மட்டும் MP ஆகணுமா? அவரு சொந்த ஊரு சென்னை, பதவிக்காக மட்டும் தூத்துக்குடிக்கு மட்டும் ஓட்டு வேணுமாம், பிறந்த சொந்த ஊரு தொகுதியில் நிற்க வேண்டியது தானே. இங்கு கொத்தடிமைகள் , முட்டாள்கள் அதிகம் அதனாலே MP பதவிக்காக மட்டும் இங்கே வந்து போக வேண்டியிருக்கு. எல்லாம் திருட்டு பதவி புத்தி.
NameMar 2, 2024 - 05:12:57 PM | Posted IP 172.7*****
Ottu yaru podurathu
MakkalMar 2, 2024 - 02:32:26 PM | Posted IP 172.7*****
Winning Candidate Kanimoli
தமிழ்ச்செல்வன்Mar 2, 2024 - 10:10:23 AM | Posted IP 172.7*****
இங்கே மண்ணின் மக்கள் யாரும் இல்லையா?
கனிமொழியைத் தவிர வேறு நாதியே இல்லையா?
அடிமைகளின் கூடாரம்...
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

விடியல் படையல் வடை யல்Mar 3, 2024 - 03:13:54 PM | Posted IP 162.1*****